ஆப்நகரம்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் வெட்டிக்கொலை!

கெங்கவல்லி அருகே, அரசு புறம்போக்கு நிலத்தை யார் ஓட்டுவது என்ற சண்டையில் முதியவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது!

Samayam Tamil 18 Jun 2019, 8:12 am
அரசு புறம்போக்கு நிலத்தை யார் ஓட்டுவது என்ற சண்டையில் சொந்த உறவினரே, முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் வெட்டிக்கொலை!
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் வெட்டிக்கொலை!


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் வசிப்பவர் கந்தசாமி (70). இவருக்கு கந்தாயி என்ற மனைவியும், பரந்தாமன், சின்னசாமி என இரு மகன்களும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் காலை தனது விவசாய தோட்டத்தின் அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இவரது தோட்டத்தின் அருகே கந்தசாமியின் உறவினர் மாரப்பன் (63) நிலமும் உள்ளது.

இருவர் தோட்டத்திற்கு நடுவிலும் சுமார் ஐந்து ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை மாரப்பன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய சொந்த செலவில் பயிர் செய்து வந்தார். இதனை அறிந்த கந்தசாமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் சென்று, அரசு நிலத்தில் மாரப்பன் பயிர் செய்து வருவதாக வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு முடிந்த நிலையில் கெங்கவல்லி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடத்தை மாரப்பனிடம் இருந்து மீட்டு மீண்டும் அரசிடம் ஒப்படைத்தனர். இடம் போய்விட்டதால் ஆத்திரமடைந்த மாரப்பன், கந்தசாமியை பழிதீர்க்க தக்க நேரத்தை எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கந்தசாமி தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது, அங்குவந்த மாரப்பன் கொடுவாளால் கந்தசாமியின் கழுத்தை வெட்டி, கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் கந்தசாமி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து மாரப்பன் மற்றும் அவர் குடும்பத்தினரை தேடி வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தை யார் ஓட்டுவது என்ற சண்டையில் ஒரு உயிர் போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி