ஆப்நகரம்

விவசாயி உயரமான நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்!

சொத்து பிரச்சனையில் வழக்குப்பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்து விவசாயி உயரமான நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்!

Samayam Tamil 2 Jun 2019, 2:40 pm
ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனையில் வழக்குப்பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்து விவசாயி உயரமான நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil விவசாயி உயரமான நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்!
விவசாயி உயரமான நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்!


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவருக்கும் நில சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று (ஜூன்-1) திருச்செல்வம் அவருடைய மகன்கள் மூன்று பேர் சேர்ந்து வெங்கடேசன் மற்றும் அவருடைய மகன்களை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் காயம் ஏற்பட்டு வெங்கடேசன், குமார் ரமேஷ், வீரபத்திரன், மோகன் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை முடிந்து நான்கு நாட்கள் முடிந்த நிலையில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை மூக்கனூர் காந்திநகர் பகுதியில் உள்ள சுமார் 70 அடி உயரமுள்ள நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி விவசாயி வெங்கடேசன் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவரை பத்திரமாக மீட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அடுத்த செய்தி