ஆப்நகரம்

10 வயது சிறுமியும், தந்தையும் வெட்டிப்படுகொலை..! வேலூரில் பயங்கரம்

வேலூர் அருகே தந்தை, மகளை வெட்டிபடுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 3 Oct 2020, 2:10 pm
வேலூர் மாவட்டம் ஒடுகத்துர் அருகே உள்ள பண்ணை வீட்டில் வேலை பார்த்து வந்தவர் பொன்னுசாமி. இவர் தனது மனைவி பாஞ்சாலி மற்றும் 10 வயது மகளுடன் அங்கேயே கடந்த சில வருடங்களாக தங்கி வந்துள்ளனர். பாஞ்சாலி மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று இரவு மூவரும் வெவ்வேறு அறைகளில் உறங்கியுள்ளனர்.
Samayam Tamil murder spot


இன்று காலை வெகுநேரம் ஆகியும் வீட்டிலிருந்தவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பொன்னுசாமியும், அவரது 10 வயது மகளும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

தவறை தட்டிக்கேட்ட போலீசுக்கு 17 தையல்..! குடிபோதை வாலிபரின் அராஜகம்...

முதற்கட்ட விசாரணையில் அந்த பண்ணை வீடு அக்சர் பாஷா என்பவருக்கு சொந்தமானது என்றும், பொன்னுசாமி குடும்பம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மனநல பாதிக்கப்பட்ட பாஞ்சாலியை மட்டும் விட்டு சென்ற மர்ம கும்பல் பொன்னுசாமியையும், அவரது 10 வயது மகளையும் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி