ஆப்நகரம்

மருமகன் அடித்ததில் மாமனார் உயிரிழப்பு... வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் ஆத்திரமடைந்து தாக்கியதில் படுகாயமடைந்த மாமனார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Samayam Tamil 27 Nov 2022, 2:40 pm
ஆற்காடு அருகே குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் ஆத்திரமடைந்து தாக்கியதில் மாமனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil vellore news


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அன்சா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான இஸ்மாயில். இவர் வேலூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு நான்கு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் பெரிய மகளான சபியா என்பவரை ஆட்டோ லோடு ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ரஹ்மத்துல்லா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரஹ்மத்துல்லாவுக்கும் மாமனார் இஸ்மாயில் ஆகியோருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்த வேலையில் நேற்று இரவு ரஹ்மத்துல்லா மற்றும் மாமனார் இஸ்மாயில் ஆகியோர் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாகியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரஹ்மத்துல்லா மாமனார் இஸ்மாயிலை தாக்கி கீழே தள்ளி உள்ளார்

இதில் சம்பவ இடத்திலேயே நிலை தடுமாறி கிழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனையில் இஸ்மாயில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடலுறவின்போது மாரடைப்பு.. கட்டிலிலேயே இறந்த கள்ளக்காதலன்.. வேலைக்கார பெண்ணுக்கு பகீர்

பின்னர் இந்த சம்பவ குறித்து வந்த ஆற்காடு காவல் துறையினர் மாமனாரை தாக்கிய மருமகன் ரஹ்மத்துல்லாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட மோதலில் மாமனாரை தாக்கி கொலை செய்த மருமகனின் செயல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி