ஆப்நகரம்

மகனின் காதலால், தந்தை படுகொலை!

கரூரில் மகனின் காதல் விவகாரத்தில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 May 2019, 12:53 pm
கரூரில் மகனின் காதல் விவகாரத்தில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil murder


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கம்மநல்லூரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகளும் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் மணிவண்ணனும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கடந்த கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தெரிந்ததால், பிச்சைமுத்துவுக்கும் பரமசிவத்துக்கும் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இரு குடும்பத்தாருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ள நிலையில், மணிவண்ணன் தனது காதலிக்கு செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இது பிச்சைமுத்துவுக்கு தெரியவர, நேராக பரமசிவனின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு முற்ற, ஆத்திரமடைந்த பிச்சைமுத்து பரமசிவனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்த பரமசிவன் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிச்சைமுத்துவையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய தம்பி முருகானந்தையும் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி