ஆப்நகரம்

மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தந்தை?

திருச்சி அருகே குடும்பத்தகராறு காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டு மகனை கொலை செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்

Samayam Tamil 28 Oct 2021, 11:35 pm
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (20). இவர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். இவர் வீட்டின் அருகே, தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பாலசுப்ரமணி இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து.
Samayam Tamil பாலசுப்பிரமணி
பாலசுப்பிரமணி


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் பாலசுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் கிடந்த காட்டுப்பகுதியிலிருந்து உடைந்த நிலையில் நாட்டு துப்பாக்கி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், அந்த துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்ததாலேயே பாலசுப்பிரமணி உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
உறுதிமொழி அளித்த ரவுடி மீண்டும் கைது!
இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில், பாலசுப்பிரமணியின் தந்தை அழகர் (எ) ராஜாவிற்கு 2 மனைவிகள். அதில் இளைய மனைவி அம்சவள்ளிக்கு பிறந்தவர் பாலசுப்பிரமணி என்பதும் தெரியவந்தது. மேலும் அவ்வப்போது அழகர் குடும்பத்தில் தகராறு செய்வதும், அதை பாலசுப்பிரமணி தட்டிக்கேட்பதும் வழக்கமாம்.

வழக்கம்போல் நேற்று இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், அழகருக்கும், பாலசுப்பிரமணிக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட போது, தந்தை அழகர் தலைமறைவாகியுள்ளார்.


இந்த சம்பவத்தில் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதால் பாலசுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நாட்டு துப்பாக்கி உடைந்த நிலையில் கிடப்பதால் தந்தையால் அவர் சுடப்பட்டாரா? நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி