ஆப்நகரம்

கர்ப்பிணி மகளை சுட்டுக் கொன்ற தந்தை: விருந்துக்கு வந்தபோது கொடூரம்!

தேன்கனிக்கோட்டை அருகே கர்ப்பிணி மகளை அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது

Samayam Tamil 14 Apr 2021, 8:32 pm

ஹைலைட்ஸ்:

  • அருணாச்சலம் தனது மனைவி மாதவியுடன் குடிபோதையில் சண்டை போட்டுள்ளார்
  • ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த அவர் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட முயன்றுள்ளார்
  • அப்போது குறுக்கே வந்த மகள் வெங்கடலட்சுமியை அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கரடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (50). இவரது மனைவி மாதவி. யுகாதி பண்டிகைகாக அருணாச்சலத்தின் மகள் வெங்கடலட்சுமி (21) மற்றும் மருமகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இன்று அருணாச்சலத்தின் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ளனர்.
அப்போது அருணாச்சலம் தனது மனைவி மாதவியுடன் குடிபோதையில் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த அவர் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட முயன்றுள்ளார்.

அப்போது குறுக்கே வந்த மகள் வெங்கடலட்சுமியை அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

ஒரு நிலம்... 50 பேர்... பெண் உள்பட கும்பல் கைது!
உயிரிழந்த வெங்கடலட்சுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி