ஆப்நகரம்

ஃபாத்திமா லத்தீஃப் தந்தையிடம் அமித் ஷா கொடுத்த உறுதி!

ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கில், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மற்றொரு முக்கியமான உறுதியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஃபாத்திமா தந்தையிடம் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 5 Dec 2019, 9:53 pm
ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டில் அதிர்வலைகளை கிளப்பியது. ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்திற்கு பிறகு, அவர் தற்கொலைக்கு காரணமாக ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் இருக்கும் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
Samayam Tamil fathima-latheef.1.438681


இதைத்தொடர்ந்து ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் தமிழ்நாட்டிற்கு வந்து தனது மகள் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலரை கம்பி எண்ண சொன்ன நீதிபதி !!

தனது மகள் மறைவுக்கு நியாயம் கேட்டுப் போராடி வரும் லத்தீஃப் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். அப்போது அவர் தனது மகள் மரணத்தில் 3 பேராசிரியர்கள், 7 மாணவர்கள் மீதுதான் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்பின் லத்தீஃப் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விசாரணை சரியான முறையில் நடக்கவேண்டும் என வலியுறுத்தினேன்.

கண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் திருப்பம்!

எங்கள் கோரிக்கையைக் கேட்டுக் கொண்ட அமைச்சர், தேவைப்பட்டால் பெண் அதிகாரி தலைமையில்,
சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி