ஆப்நகரம்

மதுரையில் கொடூரம்..! எருக்கம் பால் கொடுத்தும், தரையில் அடித்தும் பெண் சிசுக்கொலை...

மதுரை அருகே நான்காவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதற்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 May 2020, 3:45 pm
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (35). இவரது மனைவி பெயர் சித்ரா (26). இருவருக்கும் கடந்த 7 வருடத்துக்கு முன்பு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் கற்பமாகிய சித்ரா கடந்த 8 நாட்களுக்கு முன்பு இடுப்பு வலி ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
Samayam Tamil பெண் சிசுக்கொலை


அங்கு அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆகி கணவனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

சம்பவத்தன்று சித்ரா தனது மூன்று குழந்தைகளுடன் வெளியே சென்று விட்ட நிலையில், கடைசியாக பிறந்த குழந்தை வீட்டில் இருந்துள்ளது. ஆனால் மீண்டும் சித்ரா வீட்டு வந்தபோது, குழந்தை உடல்நிலை கோளாறால் திடீரென இறந்துவிட்டதாகவும், உடலை அருகில் உள்ள கருவேல காட்டில் புதைத்தாகவும் தெரிவித்துள்ளனர்.

தவமணியின் செயலில் சந்தேகமடைந்த கிராம அலுவலர் சோழவந்தான் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மருத்துவர்களின் உதவியுடன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைதினர். பின்னர் சம்பவம் குறித்து தவமணி மற்றும் அவரது தாய் பாண்டியம்மாளிடம் துருவி துருவி விசாரித்ததில், திடுக்கிடும் தகவல் வெளியாகின.

சாப்பிட உட்கார்ந்த காய்கறி வியாபாரி அடித்துக் கொலை...! காஞ்சிபுரத்தில் பெரும் சோகம்

அதாவது, தவமணிக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்காவதாக பெண் குழந்தை பிறந்தால் சம்பவத்தன்று தவமணியும் அவரது தாயும் சேர்ந்து சிசுவிற்கு எருக்கம் பால் கொடுத்து மூச்சை திணற வைத்துள்ளனர். மேலும், குழந்தையின் காலை பிடித்து தரையிலும் அடித்துள்ளனர். இதனால் தலையில் பலத்த காயமடைந்த குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து தவமணி மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பெண் சிசுக்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி