ஆப்நகரம்

உன்னால தான், இல்ல நீ தான் காரணம்- செமயா அடிச்சுக்கிட்ட பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்!

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் இடையே சிறையில் கடும் சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 16 Aug 2019, 7:40 am
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் குற்றச் சம்பவங்கள் வெளியாகி, தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Samayam Tamil Pollachi Rape Case


இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சில அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாறி, பின் சிபிஐ வசம் சென்றது.

Also Read: குடிநீரில் விஷமருந்து கலந்த மர்ம நபர்கள்- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த மே மாதம் 24ஆம் தேதி, பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக 5 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் குற்றவாளிகள் அனைவரும் சேலம் சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் சிறைக்குள் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மோதிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய சிறைக் காவலர்கள் சிலர், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் உயர் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

Also Read: குறியீடு போட்டு கொள்ளையடிக்க வரும் வடமாநில ஆசாமிகள்; அதிர்ச்சி பின்னணி- எச்சரிக்கை ரிப்போர்ட்!

கடந்த சில நாட்களாக மிகவும் சோகமாக இருந்து வந்தனர். இதையடுத்து ஒருநாள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் வாழ்வை சீரழித்ததற்கு நீ தான் காரணம். இல்லை எல்லாம் உன்னால் தான் என்று மாறி, மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர்.

இது கைகலப்பாக மாறியது. சபரிராஜனை பிற குற்றவாளிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர். அவனை நீதிபதியிடம் சென்று, எல்லா குற்றங்களுக்கும் காரணம் நீ தான் காரணம் என்று சொல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: மகளை சீண்டிய கொடூரன்; தட்டிக் கேட்ட தந்தைக்கு இப்படியொரு பயங்கரம்- மனைவி கண்முன் அதிர்ச்சி!

இதைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், சபரி ராஜனை மட்டும் தனி சிறையில் அடைத்துள்ளதாக கூறினர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி