ஆப்நகரம்

சீட்டுக்காக குடுமிப்பிடி சண்டை... ரயில் பெட்டியை அலற விட்ட பெண்கள்..!

மும்பையில் ரயில் பெட்டிக்குள் இருக்கைகாக பெண் பயணிகள் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 7 Oct 2022, 7:31 pm
சென்னையை விட மும்பை மின்சார ரயில் நிலையங்கள் மிகவும் பரபரப்பானது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு 7.45 மணியளவில், தானே-பன்வெல் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பெண்கள் பெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் ஏறியுள்ளனர்.
Samayam Tamil train ladies fight


அப்போது, அவர்கள் இருக்கைகாக மற்றொரு பெண் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி மூவரில் ஒருவர் சக பயணியை முடியை பிடித்து அடித்துள்ளார். இதனால் பெட்டியில் பயணித்த சக பயணிகள் கத்தி கூச்சலிட்டு சண்டையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த ரயில்வே காவலர் இதையிட்டு சமாதானம் செய்துள்ளார்.

அதன் பிறகு மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஆரம்பித்துள்ளது. ஆளுக்கு நாள் மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் இரு பயணிகளுக்கு ரத்தம் வரும் அளவுக்கு காயம் ஏற்பட்டு ரயில் பெட்டியே களேபரம் ஆனது.


ரயில் பிளாட்பாரத்துக்கு வந்ததும் மோதலில் காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கான் என்ற பெண் பயணி மீது வழக்கு பதிவு செய்து ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதனை வீடியோ எடுத்துள்ள சில பயணிகள் மும்பை ரயில்வே போலீசாரை டேக் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோக்கள் தீயாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி