ஆப்நகரம்

சேலம்: ஓடும் பேருந்தில் பற்றிய தீ - தப்பிய பயணிகள்!

ஓடும் பேருந்தில் திடீரென தீ பற்றி எரிந்ததாலும் கண்ணாடிகள் வெடித்து சிதறியதாலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Feb 2020, 2:10 pm
சேலம் அருகே கந்தம்பட்டியில் ஓடும் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் கண்ணாடிகள் வெடித்து சிதறிய நிலையில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
Samayam Tamil ஓடும் பேருந்தில் பற்றிய தீ


ஒரு பெண் பலி, கூட்டம் கூட்டமாக ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டனர், மகாராஷ்டிரா பேருந்து விபத்து!

வேம்படிதளத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் சென்றுக்கொண்டிருந்த பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. இதை கண்டு உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பேருந்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கச் சொல்லி உஷார் படுத்தினார்.



இப்படியொரு கொடூர கொலையா?- மகனை துண்டு, துண்டா வெட்டி - தேனி பயங்கரம்!

பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிக்கொண்டிருக்கும்போது பேருந்தில் தீப்பற்றி மளமளவெ பரவத்தொடங்கியது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறியதால் பயணிகள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி தீயை அணைந்தனர்.

பரமக்குடி: கணவரை மீட்டுத் தர வேண்டி இளம்பெண் குழந்தைகளுடன் மனு!

இந்த நிலையில், பேட்டரிக்கும் டீசல் டேங்கருக்கும் இடைப்பட்ட வயர் உராய்வு காரணமாக பேருந்து தீப்பற்றியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி