ஆப்நகரம்

விருதுநகரில் மீண்டு பட்டாசு ஆலை விபத்து: 4 பெண்கள் படுகாயம்

விருதுநகர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் நன்கு பெண்கள் படுகாயம்

Samayam Tamil 13 Mar 2021, 10:03 pm
விருதுநகர் மாவட்டம் குருமூர்த்திநாயக்கன் பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட பட்டாசு ஆலை வாசுதேவன் என்பவருக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை குறித்து வந்த தகவலின்படி, இன்று வழக்கம்போல அந்த பட்டாசு ஆலையில் கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்


அப்போது மத்தாப்பு குச்சிகளை கீழே கொட்டியபோது எதிர்பாராதவிதமாக தீ பற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் நான்கு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த 12 ஆம் தேதி சாத்தூர் அருகே உள்ள அச்சன் குளத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது சம்பவம் நடந்த சில நொடிகளிலும், இடிபாடுகளில் சிக்கியும் 19 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

காருக்குள் 'குடி'த்தனம், வைரலாகும் உற்சாக பெண்கள் வீடியோ..!

நாட்டை உலுக்கிய இந்த கோர விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பிப்ரவரி 25ம் தேதி காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி