ஆப்நகரம்

திருச்சியில் பட்டப்பகலில் தலைமை காவருக்கு அரிவாள் வெட்டு!

திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிபவர் ஹரிஹரன் (40). இவர் இன்று மாலை உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார்.

Samayam Tamil 8 Jul 2019, 9:13 pm
திருச்சியில் மருந்து கடையில் போதை மருந்து கேட்ட நபரை தட்டி கேட்ட தலைமை காவலர் சீருடையில் இருக்கும் போது அரிவாள் வெட்டு - பட்டபகலில் நடந்ததால் பொதுமக்கள் அச்சம்
Samayam Tamil திருச்சியில் பட்டப்பகலில் தலைமை காவருக்கு அரிவாள் வெட்டு!
திருச்சியில் பட்டப்பகலில் தலைமை காவருக்கு அரிவாள் வெட்டு!


திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிபவர் ஹரிஹரன் (40). இவர் இன்று மாலை உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி இஸ்மாயில் மெடிக்கலில் போதை மாத்திரை கேட்டு தகறாறு செய்வதாக காவலர் ஹரிக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ஹரிஹரன், இஸ்மாயிலிடம் தட்டிக்கேட்ட போது, இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த இஸ்மாயில் வீட்டில் இருந்த மீன் வெட்டும் அரிவாளை எடுத்து வந்து காவலர் ஹரியை தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டினார். காவலரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், இஸ்மாயில் அங்கிருந்து ஓடி விட்டார்.

படுகாயமடைந்த ஹரிஹரன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர்கள் நிஷா, மயில்வாகனன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.

இந்நிலையில் இஸ்மாயிலை அரியமங்கலம் போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், அவர் மீது பல்வேறு வழிப்பறி, அடிதடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

பட்டபகலில் சீருடையில் இருந்தபோதே தலைமை காவலரை, மீன் வியாபாரி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி