திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர் நடேச தமிழார்வன் (வயது 48) நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தரப்பினரிடம் நன் மதிப்பை பெற்றவர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீடாமங்கலம் கடைவீதியில் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி ராஜ்குமார் என்பவர் இளைஞரை ஒருவரை கடுமையாக தாக்கி நிர்வாணப்படுத்தி ரவுடித்தனம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனை அவ்வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த நடேச தமிழார்வன் தட்டி கேட்டதோடு ரவுடி ராஜ்குமார் மீது நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ஆனால் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நீடாமங்கலம் காவல்துறையினர் கஞ்சா வியாபாரி ரவுடி ராஜ் குமாரிடம் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் நேற்று மாலை நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடேச தமிழார்வன்தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரது காரை இடைமறித்தது.
மேலும் காரை விட்டு கீழே இறங்கிய தமிழார்வனை கீழே தள்ளி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடேச தமிழார்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இப்படுகொலை சம்பவத்தை அடுத்து நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இதனை அடுத்துஇருப்பதற்காக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஸ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தனிப்படையினர் நடத்திய தொடர் விசாரணையில் தமிழார்வனுக்கும் நீடாமங்கலம் அக்ரகார பூவனூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக போன்று ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை சம்பவத்தை நிகழ்த்தியது விசாரணையில் தெரியவந்தது.
கூடா பழக்கம்... பெட்டி கடைக்குள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெண்...
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் தேடுதல் வேட்டையில் தனிப் படையினர் ஈடுபட்டு வந்த நிலையில்இன்று காலை நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் அக்ரகார பூவனுரை சேர்ந்த ராஜ்குமார் 33, சூரக்குடி தெருவை சேர்ந்த மாதவன் 23, அக்ரஹார பூவனுரை சேர்ந்த மனோஜ் 23, தென்பாதி தெருவை சேர்ந்த சேனா என்கின்ற சேனாதிபதி 25, தென்பாதி உறையூர் பகுதியை சேர்ந்த எழிலரசன் 22 ஆகிய 5 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பூவனூர் ராஜ்குமார் நீடாமங்கலம் காவல்நிலைய குற்ற வாளிகள் பதிவேட்டில் உள்ளவர் என்பதும் இவர் பொதுமக்களை அச்சுறுத்தல் செய்தது தொடர்பாக இவர் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் சமீபத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் பிணையில் வெளிவந்த அவர் முன் விரோதம் காரணமாக நடேச தமிழார்வனை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நீடாமங்கலம் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 850 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நீடாமங்கலம் காவல்துறையினர் கஞ்சா வியாபாரி ரவுடி ராஜ் குமாரிடம் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் நேற்று மாலை நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடேச தமிழார்வன்தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரது காரை இடைமறித்தது.
மேலும் காரை விட்டு கீழே இறங்கிய தமிழார்வனை கீழே தள்ளி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடேச தமிழார்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இப்படுகொலை சம்பவத்தை அடுத்து நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இதனை அடுத்துஇருப்பதற்காக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஸ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தனிப்படையினர் நடத்திய தொடர் விசாரணையில் தமிழார்வனுக்கும் நீடாமங்கலம் அக்ரகார பூவனூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக போன்று ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கொலை சம்பவத்தை நிகழ்த்தியது விசாரணையில் தெரியவந்தது.
கூடா பழக்கம்... பெட்டி கடைக்குள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெண்...
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் தேடுதல் வேட்டையில் தனிப் படையினர் ஈடுபட்டு வந்த நிலையில்இன்று காலை நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் அக்ரகார பூவனுரை சேர்ந்த ராஜ்குமார் 33, சூரக்குடி தெருவை சேர்ந்த மாதவன் 23, அக்ரஹார பூவனுரை சேர்ந்த மனோஜ் 23, தென்பாதி தெருவை சேர்ந்த சேனா என்கின்ற சேனாதிபதி 25, தென்பாதி உறையூர் பகுதியை சேர்ந்த எழிலரசன் 22 ஆகிய 5 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பூவனூர் ராஜ்குமார் நீடாமங்கலம் காவல்நிலைய குற்ற வாளிகள் பதிவேட்டில் உள்ளவர் என்பதும் இவர் பொதுமக்களை அச்சுறுத்தல் செய்தது தொடர்பாக இவர் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் சமீபத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் பிணையில் வெளிவந்த அவர் முன் விரோதம் காரணமாக நடேச தமிழார்வனை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் நீடாமங்கலம் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 850 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.