ஆப்நகரம்

இளம்பெண்ணுக்கு டாட்டா காட்டிய வெளிநாட்டு மாப்பிள்ளை..! குமரி பெண் சோகம்...

வசதிபடைத்த வேறு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பதுபோல் மார்பிங் செய்த தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் மீது குமரி மாவட்டம் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 4 Jun 2020, 5:52 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கேசவபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வெட்டூர்ணிமடம் எம்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த எபினேசர் என்பவருக்கும் இளம் பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
Samayam Tamil இளம்பெண்ணுக்கு டாட்டா காட்டிய வெளிநாட்டு மாப்பிள்ளை


எபினேசர் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் வரதட்சணையாக பணம் மற்றும் நிலம் தருமாறு பெண் வீட்டில் கேட்டுள்ளார். அதற்கு பெண்வீட்டார் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் அன்று குறைந்த அளவில் முன்பணமாக பெண் வீட்டார் கொடுத்துள்ளார். இதையடுத்து எபினேசர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இச்சூழ்நிலையில் எபினேசருக்கு வசதிபடைத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது தந்தை இஸ்ரவேல் மற்றும் தாயார் பிளாரன்ஸ் ஆகியோர் முடிவு செய்தாக தெரிகிறது.

சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம், அடைத்து வைத்து வன்கொடுமை..!

இதற்காக திட்டமிட்ட எபினேசர், நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணை பற்றி அவதூறாக ஒரு கடிதத்தை எழுதியும், இளம் பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பதுபோல் மார்பிங் செய்து பெண் வீட்டாருக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து புகாரின் அடிப்படையில் எபினேசர், அவரது தந்தை இஸ்ரவேல், தாயார் பிளாரன்ஸ் ஆகியோர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி