ஆப்நகரம்

கோவை சிறுமி மர்ம மரணம்: பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

கோவையில் மர்மமான முறையில் சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 28 Mar 2019, 4:27 pm
கோவையில் மர்மமான முறையில் சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil download (9)


கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்த கூலித் தொழிலாளி சதீஷ். இவருக்கு வனிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வீட்டின் அருகே உள்ள பள்ளத்தில் மாயமான சிறுமியின் உடல் கத்தியால் அறுபட்ட நிலையில் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தது. உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போக்சா சட்டதின்கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து தனி தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டு இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவர் கொல்லப்படுவதற்கு முன்பு பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி