ஆப்நகரம்

என் மீது தவறு இல்லை.. ஜாமீன் கேட்கும் அதிமுக முன்னாள் கவுன்சிலர்..!

சுபஸ்ரீயின் மரணத்தின் தொடர்பாகக் கைதாகியுள்ள அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியுள்ளார்.

Samayam Tamil 11 Oct 2019, 1:41 pm
சென்னை கோவிலம்பாக்கத்தில் கடந்த மாதம் 12 ஆம் தேதி, அதிமுக பிரமுகர் ஜெய்கோபாலின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் உள்ள சாலையெங்கிலும் பேனர், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
Samayam Tamil 1


இந்நிலையில் பள்ளிக்கரணையில் வசிக்கும் ஐ.டி. ஊழியரான சுபஸ்ரீ என்ற இளம்பெண் அவ்வழியாகத் தனது டூ வீலரில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலைக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் பறந்து வந்து சுபஸ்ரீயின் மேலே விழுந்தது. இதனால் நிலைதடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.

சுபஸ்ரீ மரணத்திற்கு நியாயம் கிடைக்குமா? ஜெயகோபால் ஜாமீன் மனு மீது விசாரணை!

இதனையடுத்து பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி அவர் மேல் ஏறியதால் படுகாயமடைந்து உயிரிழந்தார். விபத்தைக் குறித்து பள்ளிக்கரணை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்தனர்.

உயர் நீதிமன்றம் கடிந்து கொண்டதால் போலீசார், பேனர் அமைத்த ஜெய்கோபாலின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தனர். அதன்பின்பு தொடர்ந்து தலை மறைவாக இருந்த அவரை கடந்த மாதம் 27 தேதி தனிப்படை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தது. அரை தொடர்ந்து ஜெய்கோபாலின் உறவினர் மேகநாதன் என்பவரும் கைதாகி சிறையில் உள்ளார்.

சுபஸ்ரீ மரணம்: 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றத்தில் தந்தை வழக்கு.!

இந்நிலையில் ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி புகழேந்தி தலைமையில் நடந்தது. எனினும் இதற்காக அரசு தரப்பிலிருந்து வாதாடக் கால அவகாசம் கேட்கப்பட்டதால் இந்த விசாரணையை வரும் 15 ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

ஜெயகோபால் மற்றும் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செப்டம்பர் 12 ஆம் தேதி கோவிலம்பாக்கத்தில் நடந்த எங்களது இல்ல திருமண விழாவையொட்டி, மணமக்களை வாழ்த்த பேனர் அமைக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பேனர் மேலே விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தமிழ்நாட்டை மட்டுமல்ல எங்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஆளுங்கட்சி பேனர் வைத்தால் சரியாதா? : கார்த்தி சிதம்பரம் கேள்வி

எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் எங்களுடைய பெயரை முதல் தகவல் அறிக்கையில் போலீசார் சேர்த்துள்ளது நியாயமில்லை. கடந்த 12 நாட்களாகச் சிறையில் இருக்கும் நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். இதனால் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என ஜெயகோபாலின் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 15 ஆம் தேதி நடக்கவுள்ளது.

அடுத்த செய்தி