ஆப்நகரம்

முன்னாள் திமுக மண்டல தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை

மதுரை செயிண்ட் ஜோசஃப் பள்ளி அருகில் முன்னாள் திமுக மண்டல தலைவர் வி.கே குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டியன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 18 Apr 2019, 3:57 pm
மதுரை செயிண்ட் ஜோசஃப் பள்ளி அருகில் முன்னாள் திமுக மண்டல தலைவர் வி.கே குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டியன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil 1508464f-2df1-451b-83d2-fdb7048aa3a2


அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவதை இந்தியாவில் பல பத்தாண்டுகள் பார்த்துள்ளோம்.

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாறியபின் இவை அனைத்தும் மாறின. எனினும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் அவ்வப்போது எழுகின்றன. தேர்தலை முன்னிட்டு சில கொலை, தீக்குளிப்பு சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் திமுகவின் முன்னாள் மண்டல தலைவர் குருசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும் பல நாட்களாக முன்பகை காரணமாக மோதல் இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் இன்று மதுரை சென் ஜோசப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த திமுகவின் முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் மூத்த மருமகன் எம்.எஸ். பாண்டியன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

ராஜபாண்டி ஆட்கள்தான் முன்பகை காரணமாக இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி