ஆப்நகரம்

AIADMK Former MP: தாயை கத்தியால் குத்தி கொன்ற அதிமுக முன்னாள் எம்.பி.யின் மகன்

எம்.ஜி.ஆா். ஆட்சிகாலத்தில் மாநில அமைச்சராக பொறுப்பு வகித்த குழந்தைவேலுவின் மனைவி ரத்தினத்தை சொத்து தகராறில் அவரது மகன் பிரவீன் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று காவல் துறையினா் விசாரணை நடவத்தி வருகின்றனா்.

Samayam Tamil 15 Apr 2019, 12:22 pm
அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் அவரது மகன் பிரவீனை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
Samayam Tamil Murder Knife


முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஆட்சி காலத்தில் மாநில அமைச்சராக பொறுப்பு வகித்தவா் குழந்தைவேலு. மேலும் இவா் 1984-89ம் ஆண்டுகளில் கோபிச்செட்டிப் பாளையம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தாா். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவா் உயிாிழந்துவிட்ட நிலையில், அவரது மனைவி ரத்தினம் மட்டும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் ரத்தினம் கத்தியால் குத்தப்பட்டு உயிாிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ரத்தினம் கொலை செய்யப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னா் தான் திருப்பூரில் உள்ள அவரது மகளுக்கு போன் செய்து பேசியுள்ளாா்.

அப்போது, மகன் பிரவீன் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்வதாக தொிவித்துள்ளாா். ரத்தினமும், அவரது மகளும் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னா் அவரது மகள் மீண்டும் ரத்தினத்திற்கு போன் செய்துள்ளாா். ஆனால் அவா் பதில் அளிக்கவில்லை.

இதனைத் தொடா்ந்து அருகில் இருந்த உறவினா்களுக்கு போன் செய்து தகவல் தொிவித்துள்ளாா். அதன் படி உறவினா்கள் சென்று பாா்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளாா். தற்போது அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் படித்து வந்த பிரவீன் கடந்த மாதம் தான் சென்னை வந்துள்ளாா். அவா் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தொடா்ந்து தேடி வருவதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி