ஆப்நகரம்

சம்பளம்தான் வாழ்வாதாரம்... சஸ்பெண்ட் கால படித் தொகையை கேட்கும் ராஜேஷ் தாஸ்...

பெண் எஸ்பி பாலியல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Samayam Tamil 22 Nov 2021, 5:04 pm
முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது முதலமைச்சரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சட்டஒழுங்கு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் ஐ பி எஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அப்போதைய காவல் துறை டி ஜி பி திரிபாதியிடம் பாலியல் சீண்டல் தொடர்பாக புகார் அளித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
Samayam Tamil file pic


இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதத்திற்குள் வழக்கினை விழுப்புரம் நீதிமன்றம் முடித்து வைக்க வேண்டுமென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் கடந்த 29-10-21 தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சட்டஒழுங்கு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகாத நிலையில் புகார் கொடுக்க சென்ற போது தடுத்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் மட்டும் ஆஜராகினார். அப்போது ராஜேஷ் தாஸ் தரப்பில் இவ்வழக்கில் ஆஜராக 15 நாட்கள் அவகாசம் கேட்டு நீதிபதியிடம் மனு அளித்தனர் அதற்கு ராஜேஷ் தாஸ் ஏன் ஆஜராகவில்லை என கேட்டு நீதிபதி கோபிநாத் கடிந்து கொண்டார். உயர் நீதிமன்றம் 90 நாட்களில் இவ்வழக்கினை முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் கால அவகாசம் வழங்க முடியாது எனவும் கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்ட நிலையில் கடந்த 1 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் எஸ் பி கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகினர்

இதனையடுத்து நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ராஜேஷ்தாஸ் தரப்பில், காரில் பயணிக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நிலையில் வாகனத்தில் ராஜேஷ் தாஸ், பெண் எஸ்பி மற்றும் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளனர். ஓட்டுனர் சாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் வாட்ஸ் அப்பின் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் பெண் எஸ்பி க்கும் ராஜேஷ் தாஸ்க்கும் தொடர்பில்லாத போது காரில் வந்ததாக கூறப்படும் ஒரே ஒரு போட்டோ ஆதாரம் மட்டும் போதுமானதாக இல்லை என வாதிக்கப்பட்டது.

கோவையில் பட்டப்பகலில் பெண்கள் செய்யும் அட்டூழியம்... வராங்க, பண்றாங்க, போறாங்க... ரிப்பீட்டு

காரசாரமான விவாதங்களுக்கு பின்னர் எதிர்த்தரப்பு சார்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட ஆதாரங்களை சிடி வடிவில் அல்லாமல் பென்டிரைவ் மூலம் வழங்க வேண்டும் என கூறியதோடு வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விவாகரத்தால் ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வாழ்வாதாரத்திற்கு ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ளதால், சஸ்பெண்ட் காலத்திற்கான படித் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி