ஆப்நகரம்

தென்காசியில் குடும்பத்தோடு வந்து மான் வேட்டை..! விலங்குகள் மடியும் அவலம்...

தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வன விலங்குகளை நாட்டுதுப்பாக்கியை பயன்படுத்தி வேட்டையாட முயன்ற 4 பேரை கைது செய்து, 4 லட்சம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை.

Samayam Tamil 11 Jun 2020, 7:50 pm
தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியான ஆத்துவழி கிராம பகுதியில் துப்பாக்கியுடன் சிலா் வனவிலங்குகைளை வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
Samayam Tamil தென்காசியில் மான் வேட்டை


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனசரகர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் அங்கு தனியார் தோட்டத்தில் துப்பாக்கியுடன் வலம்வந்த ராமமூர்த்தி மற்றும் அவரது மகன் செல்வகுமார் மற்றும் சூர்யபிரகாஸ், ஜெகன்நாதன் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவர்களை சிவகிரி வனசரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், அவர்கள் வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் மான், மிளா உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட வந்ததை ஒப்புக்கொண்டனர்.

முதலிரவுக்கு சென்ற புதுமணப்பெண் பலி..! மனநலம் பாதித்த மாப்பிள்ளை...

அதனை தொடர்ந்து அவர்களை வன உயிரின காப்பக சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் நாலு பேருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் 4 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

கடந்த 80 நாட்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும், நெ்லலை தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைபகுதியை ஒட்டிய வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயுன்றதாக பல்வேறு நபர்களிடமிருந்து 15 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி