ஆப்நகரம்

ஒரு நாளைக்கு எத்தனை இழப்புகள்! சென்னையில் ஷாக் அடித்து 4 வயது சிறுவன் பலி...

சென்னை அருகே வெட்டப்பட்ட ஒயரை தொட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Aug 2020, 8:58 pm
சென்னை நுங்கம்பாக்கத்தை அடுத்த சூளைமேட்டைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு 4 வயதில் தருணேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுவன் தருணேஸ்வரன் வீட்டிலிருந்த மின்விசிறியின் ஸ்விட்சை ஆன் செய்துள்ளான்.
Samayam Tamil victim


அப்போது மின்விசிறியின் ஒயரில் சேதமடைந்திருந்த பகுதியில் தவறுதலாக கை பட்டுள்ளது. இதனையடுத்து மின்சாரம் சிறுவனை தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மயங்கியுள்ளான். சிறுவனின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த தட்சிணாமூர்த்தி, உடனே சிறுவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தருணேஸ்வரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால் மகனின் முகத்தை பார்த்து கதறி அழுத தந்தை தட்சிணாமூர்த்தியின் சோக நிலை அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

கோவையில் சிறுமி கடத்தல்! 5 மாதங்கள் கழித்து வந்த தகவல்... பெற்றோர் கண்ணீர்

இந்த சம்பவம் ஒரு விபத்து என்றாலும் இன்றைய நாளில் மூணாறு நிலச்சரிவு பலி உயர்வு, தெலங்கானா வெடி விபத்து என தினம்தினம் இறப்பு செய்திகள் வந்துகொண்டிருப்பது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி