ஆப்நகரம்

வாங்கிய சிகரெட்டிற்கு காசு கேட்ட கடைக்காரர் அடித்து கொலை.!! 4 வாலிபர்கள் கைது.!

பூனாவில், பான் கடை உரிமையாளரிடம் தகராறு செய்து அடித்து கொலை செய்த நான்கு இளைஞர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 3 Sep 2019, 6:35 pm
மகாராஷ்டிரா மாநிலம், பூனாவில் பான் கடை நடத்தி வருபவர் சந்தோஷ் கடாம். இவருக்கு வயது 32. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2 . 30 மணி அளவில் சோம்நாத், அபிஷேக், விஷால் மற்றும் பிரசாந்த் ஆகிய நான்கு இளைஞர்கள் சந்தோஷ் கடைக்கு வந்துள்ளனர்.
Samayam Tamil 02


கல்வி வளாகத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி அலப்பறை.! வீடியோவால் சிக்கிய சேகர்கள்..

கடையில் விலையுயர்ந்த சிகரெட்டை கேட்டுள்ளனர். பின்பு, கொடுத்த சிகரெட்டிற்கு கடை உரிமையாளர் சந்தோஷ் பணம் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க மறுத்த வாலிபர்களில் ஒருவர் சந்தோஷை கன்னத்தில் அறைந்து தகராறு செய்து விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

டூ வீலரில் 100 மது பாட்டில்கள்- வசமாக சிக்கிக் கொண்ட பெண்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்த அந்த கும்பல் சந்தோஷை கத்தியால் குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடித்தாக கூறப்படுகிறது. கத்தியால் தாக்கப்பட்ட சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

சந்தோஷ் நடத்தி வந்த கடை அருகே அவரது உறவினர் ஒருவர் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த அவர் கொலை செய்த கும்பல் ஓட்டிவந்த பைக்கின் எண்ணை காண்காணித்துள்ளார். அதன் மூலம் போலீசார் அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் கொலையாளிகள் நாவரும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலையில்லாமல் சுற்று கொண்டிருந்ததாக தெரிந்துள்ளது.

காதலிக்கு ''சரக்கு பாட்டிலால்'' ரத்தத்தை காணிக்கையாக்கி தற்கொலை செய்த காதலன்..!

21 வயது நிரம்பிய இவர்களின் மேல் இதுவரை எந்த குற்றச் செயல்களிலும் வழக்கு பதிந்தது இல்லை என போலீசார் தரப்பு கூறுகிறது. கொலையை நேரில் பார்த்த சாட்சியை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்கள்.

அடுத்த செய்தி