ஆப்நகரம்

சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் படுகொலை- நண்பர்கள் கைது!

சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த மாதேஸ் நேற்று ஆண்டிப்பட்டி பகுதியில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Samayam Tamil 12 Jul 2019, 1:37 pm
சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
Samayam Tamil சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் படுகொலை- நண்பர்கள் கைது!
சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் படுகொலை- நண்பர்கள் கைது!


சேலம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(28). சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்த மாதேஷ் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக தனது நண்பர் டேவிட்டின், விலை உயர்ந்த காரை தீவைத்து எரித்துள்ளார். இதில் மாதேஷ் கைதாகி, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி மாதேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். வீட்டு அருகில் மீன் பண்ணை அமைத்து தொழில் நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் டூவிலரில் மீன்பண்ணைக்கு சென்று கொண்டிருந்தபோது ஆண்டிபட்டி ஏரி அருகில் காரில் வந்த மர்மகும்பல் மாதேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. உடன் சென்ற வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார். இதில் மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தம்பியைக் கொன்றவனைக் கொன்று தம்பியின் சமாதியில் ரத்தம் தெளித்த அண்ணன்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சூரமங்கலம் காவல்துறையினர் சடலத்தை மீட்டு மாதேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார், யார் கொலை செய்தனர் என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாதேஷின் நண்பர் டேவிட் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாதேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக டேவிட், சத்தியா, எபி, குமார், முருகன், பாஸ்கர் ஆகியோரை சூரமங்கலம் காவலர்கள் கைது செய்தனர்

பாலியல் பலாத்காரத்திற்கு பயந்து மாட்டுத்தொழுவத்தில் பெண் தஞ்சம்

டேவிட் மற்றும் அவரது நண்பர்கள் ஏற்கனவே பல குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள். அவர்களுடன் மாதேஷூம் பல சட்ட விரோத சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் ஏற்பட்ட தகறாறு கொலையில் முடிந்துள்ளது.

அடுத்த செய்தி