ஆப்நகரம்

கமிஷனர் அலுவலகம் முன் மர்ம கும்பல் கொலைவெறித் தாக்குதல்!

பிரதீப் என்பவர் ஏற்கனவே ஓரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர். இவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். தினமும் காலை 10 மணிக்கு சிறைக்குச் சென்று பிரதீப் கையிழுத்திட வேண்டும்.

Samayam Tamil 14 May 2019, 4:01 pm
பிரதீப் என்பவர் ஏற்கனவே ஓரு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர். இவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். தினமும் காலை 10 மணிக்கு சிறைக்குச் சென்று பிரதீப் கையிழுத்திட வேண்டும்.
Samayam Tamil attack_bang_CI


கடந்த செவ்வாய் அன்று தமிழ்வாணன் என்பவர் பிரதீப்பை சிறைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் சிறையில் இருந்து வீடு திரும்புகையில் ஒரு ரவுடி கும்பல் அவர்களை வழிமறித்து, அவர்களை ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளது. இச்சம்பவம் கமிஷனர் அலுவலகம் முன்னர் நடைபெற்றுள்ளது. பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது.

அப்பகுதியில் இந்த தாக்குதலை கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரு பெண் இதனைக் கண்டு மயங்கினார்.

இச்சம்பவத்தையடுத்து ரேஸ் கோர்ஸ் காவல் ஆய்வாளர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காமராஜபுரத்தை அடுத்த கணபதி பகுதியைச் சேர்ந்த ஹரி, சூர்யா, சதீஷ், தனபால் ஆகியோர் தங்களை தாக்கியதாக தாக்கப்பட்ட இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

துணை கமிஷனர் எல், பாலாஜி சரவணன் 3 தனிப்படைகள அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறார்.

தாக்கிய கும்பலுக்கும் இந்த இரு இளைஞர்களுக்கும் முன்பகை இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி