ஆப்நகரம்

மதுரை அருகே பட்டபகலில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்!

ஜாமீனில் வெளிவந்த இளைஞனை, பட்டபகலில் 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Jun 2019, 2:23 pm
மதுரையில் ஜாமீனில் வெளிவந்த இளைஞனை, பட்டபகலில் 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil மதுரை அருகே பட்டபகலில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்!
மதுரை அருகே பட்டபகலில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்!


மதுரை செல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அஜீத்(23). இவர் உடன்பிறந்த சகோதரர் ரஞ்சித். அஜித் அப்பகுதியில் உள்ள சில நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். இதனிடையே அஜீத்துக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜீத் தனது அண்ணன் ரஞ்சித்திடம் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஜித்தும், ரஞ்சித்தும் தன்னை அடித்த வாலிபரை மதுரை செல்லூர் பகுதியில் ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அந்த இளைஞன் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி கைது!

இந்நிலையில் அஜித் மற்றும் ரஞ்சித்தை தல்லாகுளம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த இருவரும், தினமும் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு வருகை தந்து கையெழுத்திட்டு வந்துள்ளனர்.

இன்றுடன் ஒரு வாரம் முடியப் போகிற நிலையில் இவர்களால் தாக்கப்பட்ட வாலிபர், அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.

கணவர் திட்டியதால் டிக்-டாக்கில் வி‌ஷம் குடிப்பது போல் வீடியோ வெளியிட்ட பெண் பலி!undefined


இதனிடையே சகோதரர்கள் இருவரும் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வருகிறபோது 7 பேர் கொண்ட கும்பல் ரஞ்சித் மற்றும் அஜித்தை ஓடஓட விரட்டி கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.

இதில் ரஞ்சித் சிறு காயங்களுடன் தப்பி ஓடி விட்டார். ஆனால் அஜித் பல வெட்டுக்காயங்களுடன் தப்ப முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த தல்லாகுளம் போலீசார் அஜித் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு தப்பிச்சென்ற ஏழு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி