ஆப்நகரம்

போலீஸ் எனக்கூறி ஆந்திரகாரருக்கு நாமம் போட்ட சென்னை கும்பல்.. 1 கோடி ரூபாய் அபேஸ்..!

போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 1 கோடியே 40 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்ற கும்பலை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 3 Feb 2023, 4:57 pm
கோடி ரூபாய் பணத்தை அலேக்காக தூக்கி சென்ற மர்ம நபர்களை யானைகவுனி போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil chennai crime


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நகைக்கடை தொழிலதிபர் சுப்பாராவ் மற்றும் அவரது பணியாளரான ரகுமான் இருவரும் இன்று சென்னை சென்ட்ரலில் பேருந்தில் இருந்து இறங்கினர். பின்னர் அங்கிருந்து சவுகார்பேட்டைக்கு செல்ல ஆட்டோவில் ஏறியுள்ளனர். அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் ஆட்டோவை மடக்கியுள்ளனர்.

அப்போது, மர்ம நபர்கள் போலீஸ் போல நடித்து சுப்பாராவ் கொண்டு வந்த பையை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி பையை வாங்கியுள்ளனர். அதில், சுமார் 1 கோடியே 40 லட்சம் ரொக்க பணம் இருந்துள்ளது. அதுகுறித்து கேட்டபோது, நகை வாங்குவதற்காக சவுக்கார்பேட்டைக்கு செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடுக்காட்டில் எலும்புக்கூடாக பள்ளி மாணவி... தருமபுரியில் அதிர வைக்கும் சம்பவம்

உடனே, அந்த மர்ம கும்பல் பையை பணத்துடன் எடுத்துக்கொண்டு காரில் தப்பியது.
பணத்தை பறிகொடுத்த ஆந்திரப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவம் குறித்து அருகில் உள்ள யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த யானைகவுனி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர்.

போலீசார் சவுகார்பேட்டை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா அல்லது ஹவாலா பணமா என பல கோணங்களில் யானை கவுனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமதி வழக்கில் விசாரணை நிறைவு; இறுதி அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் - சிபிசிஐடி

மேலும், இங்கு பணம் கொண்டு வந்ததன் காரணம் என்ன என்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை பின் தொடர்ந்து வந்ததாக கூறும் விஷயம் உண்மை தானா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொள்ளை சம்பவம் உண்மையாக இருந்தால் மிக விரைவில் கொள்ளையர் பிடிபடுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி