ஆப்நகரம்

சென்னையில் பாலியல் தொழில், பணத்தை பிரித்துக்கொள்வதில் தகராறு..! இளம்பெண் கைது

சென்னை அருகே பாலியல் தொழில் செய்து சம்பாதித்த பணத்தை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மீது கொலை செய்ய முயன்ற பெண் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 9 Sep 2020, 6:46 pm
பாலியல் தொழில்கள் கொடிகட்டி பறக்கும் வட மாநிலங்களில் தொழில் தொய்வை அடைவதால் தென் மாநிலங்களில் பட்டறையை போடுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
Samayam Tamil nila akdhar


சென்னை அசோக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாலிபர் ஒருவருடைய கதறல் சத்தம் கேட்டதையடுத்து காவலாளி சென்று பார்த்துள்ளார். அப்போது, வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்த வீட்டிற்குள் அந்த வாலிபர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்த காவலாளி, அசோக் நகர் காவல் நிலையத்துக்கும் போன் செய்துள்ளார்.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் வாலிபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதுகுறித்து விசாரித்ததில், பாதிக்கப்பட்ட நபர் டெல்லியை சேர்ந்த தீபக் என்றும், சென்னையில் துணிக்கடை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியதாகவும் தெரிவித்தார். ஆனால், வாலிபரின் உடலில் உள் காயங்களும் இருந்ததால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், சம்பவம் நடந்த நேரம் வாலிபர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.



அதில், கையில் பெட்டியுடன் ஒரு பெண்ணும், ஆணும் தப்பி செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. மேலும், தீபக்கின் செல்போன் எண்ணை சோதனையிட்டதில் அவர் கடைசியாக இரு எண்களை அடிக்கடி தொடர்பு கொண்டிருந்ததை கண்டறிந்தனர். அந்த எண்களை டிராக் செய்ததில், மீனம்பாக்கம் செல்போன் டவரை காட்டியுள்ளது. உடனே சிசிடிவியில் பதிவாகியிருந்த இருவரின் புகைப்படங்களை மீனம்பாக்கம் காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்த அசோக் நகர் போலீசார் அவர்களை குறித்து விசாரிக்க கூறினார்.

அதன்படி, மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் இருந்த அந்த இளம்பெண்ணையும், வாலிபரையும் பிடித்த போலீசார் அசோக் நகர் காவல்நிலையத்தில் ஒப்படைந்தனர். அவர்களை, விசாரித்ததபோது இளம்பெண் பெயர் நிலா அக்தர் என்றும் வாலிபர் பெயர் ஹேமந்த் என்றும் தெரியவந்தது. மேலும், நிலாவும், ஹேமந்த் இருவரும் சேர்ந்து சென்னையில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் சிறுமிகள் கடத்தல், சித்தப்பா உட்பட 2 பேர் கைது..!

நிலா அக்தருக்கு தீபக் தரகராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், பாலியல் தொழில் மூலம் சம்பாதித்த பணத்தை பிரித்துக் கொள்வதில் தீபக்குடன் ஏற்பட்ட சண்டையில் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். அதனால், சம்பவம் நடந்த அன்று தீபக் மீது தீப்பற்ற வைத்துவிட்டு வீட்டை போட்டுவிட்டு சென்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த செய்தி