ஆப்நகரம்

கோவையில் பிளஸ் 1 மாணவி தற்கொலை..! அதிர்ச்சி தரும் பின்னணி...

கோவை அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 1 Aug 2020, 8:15 pm
கோவை ரத்னபுரி சுப்பைய கவுண்டர் வீதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்(49). இவருக்கு 17 வயதில் மகள் இருந்தார். இவர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
Samayam Tamil plus one student suicide


மாணவி பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி நேற்று தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், நீண்ட நேரமாகியும் சுவாதி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சுவாதியின் பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது சுவாதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

'மேலயா கை வைக்கிற' இளம்பெண்ணின் உதை தாங்காமல் தெறித்து ஓடிய வாலிபர்..!

இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பெண் குறைவாக பெற்ற காரணமாக பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு பிளஸ் ஒன் தேர்ச்சியில் கோவை மாவட்டம் முதலிடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி