ஆப்நகரம்

காதலனுக்கு செல்ஃபி வீடியோ அனுப்பி தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..! அதிர்ச்சி வீடியோ

ஆந்திராவில் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்த இளம்பெண் காதலனுக்கு செல்பி வீடியோ போட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

Samayam Tamil 11 Jul 2020, 9:46 pm
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரைச் சேர்ந்த இளம்பெண் ரம்யா. இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் ரம்யா, சிவபார்கவ் என்ற வாலிபரை கடந்த சில மாதங்களாக காதல் இருந்து வந்தது.காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil andra girl committed suicide


இந்த நிலையில், சிவபார்கவ் திடீரென்று ரம்யாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் மனமுடைந்த ரம்யா காதலனுக்கு வாட்ஸப்பில் பலமுறை மெசேஜ் அனுப்பியும் சிவபார்கவ் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

எனினும், மணிக்கணக்கில் பேச தேவையில்லை ஒரே ஒரு ஐந்து நிமிடம் மட்டும் பேசு அது போதும். நட்பு ரீதியில் பேசினால் அதுவே போதுமானது என்று ரம்யா காதலனுக்கு மெசேஜ் அனுப்பி கெஞ்சியுள்ளார்.

ஆனாலும் சிவபார்க்கவ் ரம்யாவுக்கு நேரம் ஒதுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ரம்யா, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி காதலனுக்கு செல்பி வீடியோ அனுப்பி தற்கொலை செய்து கொண்டார்.


இந்நிலையில், ராமாயாவின் அறை உள்பகுதியில் பூட்டிருந்ததாலும், வெகு நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாமல் இருந்ததனாலும் அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரம்யா தூக்கில் பிணமாக தொங்கியிருந்ததை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை: ''பாலியல் தொழில் செய்து வந்தோம்''... பெற்றோருக்கு பயந்து திருநங்கை தற்கொலை...

இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ரம்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரம்யா செல்போனை கைப்பற்றிய போலீசார் அவர் காதலனுக்கு அனுப்பிய வாட்சப் மெசேஜ்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

அடுத்த செய்தி