ஆப்நகரம்

கல்யாணத்துக்கு கட்டயப்படுத்தியதால் காதலியை கொன்ற காதலன்!

ஐதராபாத்தைச் சேர்ந்த சுனில், லாவண்யா (25) இருவரும் சிஎம்ஆர் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். காதலர்களான இருவரும் வேலை கிடைத்த பின்னர் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். திருமணத்தை விரும்பாத சுனிலிடம் லாவண்யா கட்டாயப்படுத்த, ஆத்திரமடைந்த சுனில் லாவண்யா கழுத்தை கயிறு கொண்டு நெறித்து கொன்றார்.

Samayam Tamil 15 Apr 2019, 4:54 pm
ஐதராபாத்தைச் சேர்ந்த சுனில், லாவண்யா (25) இருவரும் சிஎம்ஆர் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். காதலர்களான இருவரும் வேலை கிடைத்த பின்னர் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். இருவரும் மென்பொறியாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
Samayam Tamil suicide


லாவண்யா வீட்டில் சம்மதம் பெற்றார். சுனிலுக்கு திருமணத்தின்மீது நாட்டம் குறைந்தது. லாவண்யாவின் வற்புறுத்தலின்பேரில் சுனில் லாவண்யாவின் பெற்றோரிடம் ஒரு பெய் கூற நிர்பந்திக்கப்பட்டார்.

அதன்படி தனக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்துவிட்டதாகவும் தான் ஏப்., 4ம் தேதி விமானத்தில் மஸ்கட் செல்லவிருப்பதாகவும், லாவண்யாவுக்கும் மஸ்கட்டில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், அவரையும் தன்னுடன் அனுப்புமாறும் பொய் கூறினார். இதனை லாவண்யாவின் பெற்றோர் நம்பி, அவர்களை விமான நிலையத்தில் விட்டுச் சென்றனர். தாங்கள் கிளம்ப இருந்த மஸ்கட் விமானம் ஏற்கனவே கிளம்பிவிட்டதால், நாளை வரவுள்ள அடுத்த விமானத்தில் கிளம்பலாம் என கூறி சுனில் ஏர்போர்ட் லாட்ஜில் லாவண்யாவுடன் தங்கினார்.

அங்கு லாவண்யா மீண்டும் திருமண பேச்சை துவங்க, அது வாக்குவாதமாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த சுனில் லாவண்யா கழுத்தை கயிறு கொண்டு நெறித்து கொன்றார். உடலை சூட்கேஸில் அடைத்து கழிவு கால்வாயில் அடைத்தார். பின்னர் லாவண்யா செல்போன் மூலம் அவரது தங்கைக்கு தாங்கள் மஸ்கட்டுக்கு வந்துவிட்டதாக மெஸேஜ் அனுப்பினார்.

சந்தேகமடைந்த லாவண்யா குடும்பம் போலீஸை நட, அவர்கள் சுனிலை மடக்கிப் பிடித்தனர். சுனில் தற்போது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படவுள்ளார். லாவண்யா உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின்னர், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்த செய்தி