ஆப்நகரம்

நான்கு மாதங்களாக தொல்லை, ஹத்ராஸ் இளம்பெண்ணின் தாய் குமுறல்!

உபியில் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண் நீண்ட நாட்களாக தொல்லையை சந்தித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

Samayam Tamil 4 Oct 2020, 6:22 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் கூட்டு பலாத்காரத்துக்குள்ளாகி செப்டம்பர் 29 தேதி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அதையடுத்து அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாமல் நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் தகனம் செய்தனர்.
Samayam Tamil up rape protest


இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டதால் மறு பிரேத பரிசோதனை செய்யும் வாய்ப்பையும் இந்த வழக்கு இழந்துள்ளது. இவை அனைத்தும் மாநில அரசால் திட்டமிட்டு நடந்து வருவதாக பொதுமக்களும், எதிர் கட்சிகளும் குற்றம் சாட்டி வருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகியுள்ள நான்கு பேரில் சந்தீப் மற்றும் லூவ் குஷ் ஆகியோர் உயிரிழந்த தலித் பெண்ணை நான்கு மாதங்களாக பின் தொடர்ந்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தற்போது கூறியுள்ளார். அப்பெண் வெளியில் செல்லும்போதெல்லாம், வழி மறிப்பதும், கிண்டலடிப்பதும் என மேற்கண்ட வாலிபர்கள் செய்து வந்துள்ளனர்.

நீ இந்த சாதி தான? நம்பி வந்த மனைவியை சீரழித்த கணவன்! தருமபுரி பரபரப்பு

இதனால், பாதிக்கப்பட்ட பெண் அதுகுறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டதாக தற்போது அவர் கூறினார். வாலிபர்களின் சீண்டல்களுக்கு பின்னர் வெளியில் செல்லும் நேரங்களில் அண்ணியை உடன் அழைத்துக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போதும்கூட ஒருநாள் சந்தீப் மற்றும் லூவ் குஷ் இருவரும் இளம்பெண்ணை சீண்டியுள்ளனர்.

அப்போது, உங்களை சிறையில் அடைக்க போகிறேன் பாருங்கள் என்று இளம்பெண்ணின் அண்ணி எச்சரித்துள்ளார். இருப்பினும், மிரட்டலுக்கு பணியாத அந்த வாலிபர்கள் தங்கள் மகளை கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்று இளம்பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி