ஆப்நகரம்

6 மாதம் கழித்து மயக்கம்... இளம்பெண்ணுக்கே தெரியாமல் கர்ப்பம்! காதலன் கைது

கன்னியாகுமரியில் காதலியை ஏமாற்றி கர்ப்பமாகிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 21 Feb 2020, 2:51 pm
கன்னியாகுமரி மாவட்டம் திருக்கணங்கோட்டையைச் சேர்ந்தவர் அனிஷ். இவர் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் சகோதரி நாகர்கோவிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு பின்னர் வீடு திரும்பவில்லை.
Samayam Tamil கன்னியாகுமரி இளம்பெண்ணுக்கே தெரியாமல் கர்ப்பம்


இதனால் சகோதரியை தேடி கண்டுபிடிக்க அப்பெண் அனிஷுடன் நாகர்கோவிலுக்கு சென்றார். அங்கு இருவரும் தங்குவதற்காக லாட்ஜ் எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஓரிரு நாட்களில் அங்கிருந்து வீட்டுக்கு வந்தடைந்த இளம்பெண் 6 மாதங்கள் கழித்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை ஆசுவாசப்படுத்திய உறவினர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ராணுவத்தில் கணவர், டிக்டாக்கில் மனைவி..! டூயட் போட்டவரை தீர்த்துக்கட்ட முடிவு!

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண் கர்ப்பமாக இருக்கிறார் என கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியான உறவினர்கள் பெண்ணிடம் விசாரித்ததில், சகோதரியை தேடி நாகர்கோவிலுக்கு சென்றிருந்த போது அனிஷ் என்னிடம் குடிப்பதற்காக ஜூஸ் கொடுத்ததாகவும், அதை குடித்ததும் மயங்கி விட்டேன். கண் விழித்து பார்த்தபோதுதான் லாட்ஜில் இருப்பது தெரிந்தது என்றார்.

இதையடுத்து அனிஷ்தான் எங்களது மகளை மயக்கமடைய செய்து வன்கொடுமை செய்திருக்க வேண்டும் என உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அனிஷை கைது செய்தனர்.

அடுத்த செய்தி