ஆப்நகரம்

இப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத்த 7 ஆண்டு ரகசியம்!

பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் 7 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 22 Nov 2019, 9:10 am
பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் 7 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது.
Samayam Tamil girl murder case revealed after 7 years by the accused in tirunelveli
இப்படி வாயை கொடுத்து சிக்கிக்கிட்ட கொலைகாரர்கள் - பதறவைத்த 7 ஆண்டு ரகசியம்!


கொலை மிரட்டல் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் லாலுகாபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த வழக்கில் மணிகண்டன், ஆசிர்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.

பெண்ணுடன் காதல்

அதாவது 2012ல் நடந்த பெண் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது எப்படி நடந்தது என்பதை குற்றவாளிகளே போலீசாரிடம் விளக்கியுள்ளனர். சேரன்மாதேவியை சேர்ந்த சிவக்குமார், மணிகண்டன், ஆசிர்செல்வம் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இதில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த சிவக்குமார் ரெட்டியார்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

இதில் சிவக்குமார் திருமணம் ஆனவர். சம்பந்தப்பட்ட பெண் விவகாரத்து பெற்று வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மயக்க மருந்து கொடுத்து நண்பர்கள் மணிகண்டன், ஆசிர்செல்வம் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பெண் கொடூர கொலை

இதையடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் தொந்தரவு செய்து வந்ததால், நெல்லையில் சில காலம் ஒன்றாக வசித்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தனது நண்பர்களை வரவழைத்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்து சிவக்குமார் கொன்றுள்ளார்.

விசாரணையில் அதிர்ச்சி

அவரது உடலை தச்சநல்லூர் வாசுடையார் சாஸ்தா கோயில் அருகே புதைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மும்பை சென்ற சிவக்குமார் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்துள்ளார். இந்த தகவல் அனைத்தையும் மணிகண்டன், ஆசிர்செல்வம் ஆகியோர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

7 ஆண்டு ரகசியம்

இதன்பேரில் மும்பை சென்று சிவக்குமாரை கைது செய்து, தமிழகம் அழைத்து வந்து போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த சம்பவம் திருநெல்வேலி பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி