ஆப்நகரம்

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுமிகள்... சிறார் ஜெயிலில் அட்டூழியம்... பதற வைக்கும் சம்பவம்...

குஜராத் சிறார் சிறையில் இருந்த சிறுமியை பாலியல் ரீதியாக கொடுமை படுத்திய வழக்கில் இரண்டு மைனர் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டு விடுதலையாகியுள்ளனர்.

Samayam Tamil 29 Jan 2020, 5:45 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஓதவ் என்ற பகுதியில் சிறுமிகளுக்கான சிறார் ஜெயில் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மைனர் பெண் ஒருவரை அவருடைய செல்லில் இருந்த இரண்டு சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.
Samayam Tamil சிறுமியை பலாத்காரம் செய்த சிறுமிகள் சிறார் ஜெயிலில் அட்டூழியம்


அந்த சிறுமி உடை மற்றும் நேரங்களில் அவரை பலாத்காரம் செய்வதும், அந்தரங்க பகுதியில் தொட்டு பார்த்து இச்சைக்கு கூப்பிட்டு வற்புறுத்துவதுமான அந்த சிறுமி சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் சந்திக்கும் சித்ரவதைகளை சிறை அதிகாரிகளுக்கு விவரித்துள்ளார். இதையடுத்து அந்த இரண்டு சிறுமிகள் மீது மகிளா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் அவர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி (section 376) இரண்டு சிறுமிகளையும் வதோதரா சிறார் பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதில் ஒரு சிறுமிக்கு மட்டும் பெயில் கிடைத்தது.

மற்றொரு சிறுமி மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் இருந்ததால் அவருக்கு பெயில் கிடைக்கவில்லை. இந்த விசாரணை நடந்த வருவதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஸ்கிசோபெர்னியா (schizophrenia) என்ற மன நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 16ம் தேதி இந்த வழக்கு நீதிபதி பி.சி. ஜோஷி முன்பு விசாரணைக்கு வந்தது.

சென்னை: அறுவை சிகிச்சைக்குப் போகும் முன் நோயாளி மர்ம மரணம்... மருத்துவமனை முற்றுகை

அப்போது குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சிறுமிகள் ஆஜராகினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பு வக்கீலும் ஆஜராகினர். இதுகுறித்து நீதிபதி கேள்வி எழுப்பியபோது பாதிக்கப்பட்ட சிறுமி மனநோய் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் ஒரு வார்த்தை கூட ஒழுங்காக பேச இயலவில்லை. ஆகையால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என கூறினார்.

மேலும் சிறுமியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில் குற்றவாளிகள் பெயரும் இடம் பெறாததாலும், பாதிக்கப்பட்ட சிறுமியால் நடந்தவற்றை நீதிமன்றத்தில் கூற முடியாததாலும், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மைனர் பெண்களையும் நீதிபதி இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி