ஆப்நகரம்

பெரம்பூர் நகைக் கடை கொள்ளை: 9 கிலோ தங்கம் அபேஸ் - ஷட்டரை துளையிட்டு துணிகரம்!

பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் செயல்படும் நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 10 Feb 2023, 11:18 am
சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் செயல்படும் நகைக் கடையில் ஷட்டரை உடைத்து தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil jl gold palace


வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஜெ.எல்.கோடு பேலஸ் என்ற நகைக் கடை செயல்பட்டு வருகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் Vs கேஎஸ் தென்னரசு: ஈரோடு கிழக்கு - யாருக்கு செல்வாக்கு? கள நிலவரம் இதுதான்!

ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இந்த நகைக்கடையின் முன்பக்க ஷட்டரை வெல்டிங் மிஷின் கொண்டு அறுத்து உள்ளே நுழைந்து, மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர கற்கள் ஆகியவை திருடு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஸ்ரீதர் அளித்த புகாரைத் தொடர்ந்து வியாசர்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் தங்கள் பணியை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மூடுபனி எப்போது குறையும்? வானிலை ஆய்வு மைய இயக்குநர் சொன்னது என்ன?
கடையைச் சுற்றி நான்கு திசைகளில் உள்ள பிற கடைகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் இந்த கொள்ளை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி