ஆப்நகரம்

போலீஸை தாக்கியவருக்கு கலெக்டர் கொடுத்த ஷாக்!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் போலீஸை தாக்கியவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 20 Feb 2020, 9:29 am
உச்சிப்புளி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் ஜனவரி மாதம் சிகரெட் கேட்ட விவகாரத்தில் இரண்டு பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் உச்சிபுளி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜெயபாண்டி, நந்தகுமார் ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரிக்க முயன்றனர்.
Samayam Tamil போலீஸை தாக்கியவருக்கு கலெக்டர் கொடுத்த ஷாக்


ஆனால் போதையில் இருந்த இரு நபரகளும் உதவி ஆய்வாளர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் போலீசாரின் இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மாவு கட்டு போட்டாச்சு; அப்புறம் என்ன? கெஞ்சும் ரவுடி கணேசனின் வீடியோவை பாருங்க!

இந்த சம்பவத்தில் போலீசாரின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உச்சிப்புளி அருகே வெள்ளமாசிவலசை பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி கணேசனை(25) போலீசார் கைது செய்தனர். அவர் காவல் நிலையத்தின் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவு கட்டு போட்டுள்ளார். தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.

சேலம்: அதிகாலையில் அரங்கேறிய கோரவிபத்து - 20 பேர் பலி!

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் கணேசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி