ஆப்நகரம்

கரூர்: மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்!

தெருவில் செல்பவர்களை தூக்கிச் சென்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் சினிமா காட்சிகளைப் போன்று ஒரு சம்பவம் குளித்தலையில் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 7 Dec 2019, 12:01 pm
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு சிறப்பு முகாம் நடைபெற்றது.
Samayam Tamil மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்


அப்போது டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த சத்யன் என்பவரை அழைத்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து 1100 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.

தெலங்கானா என்கவுண்டர் நடந்த கதை!

சத்யனின் உறவினர்கள் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். 50 வயதான சத்யன் மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகாத அவரை அழைத்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்தது ஏன் என அவரது தாய் சரோஜா, உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக சத்யனின் உறவினர்கள் குளித்தலை காவல் நிலையத்தில் மருத்துவர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

ஆன்லைன் டெலிவரி: செல்போன்களை அபேஸ் செய்த நண்பர்கள்!

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மருத்துவர்கள், “சத்யன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நார்மலாக இருந்தார். அவர் ஒப்புதல் அளித்தன் பேரிலே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். உறவினர்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

Chennai Rains: அதிகாலை குளிர்ச்சி- தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுத்துக் கட்டிய மழை!

அடுத்த செய்தி