ஆப்நகரம்

அடுத்த சம்பவம்; எல்லை மீறும் அரசு பள்ளி மாணவர்கள்.... வெளியான அதிர்ச்சி வீடியோ..!

வேலூர் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறை மேஜையை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 25 Apr 2022, 12:44 pm
வேலூர் மாவட்டம் துரைப்பாடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியின் வகுப்பறை ஒன்றில் உள்ள இரும்பு மேஜையை மாணவர்கள் சூறையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு பிறகு மாணவர்களின் நடவடிக்கை,உடை, பேச்சு அனைத்தும் மாறிவிட்டதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.
Samayam Tamil அரசு பள்ளி மாணவர்கள் அராஜகம்


அதனை உறுதி படுத்தும் விதமாக மாணவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. பள்ளி சீருடையில் பேருந்தில் பயணிக்கும்போதே மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மாணவன் ஒருவன் ஆசிரியரை மிரட்டி கை ஓங்கும் வீடியோ, பீர் பாட்டிலை உடைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியையை குத்த சென்ற மாணவன் வீடியோ என அடுத்தடுத்து வெளியாகின.

இந்நிலையில், மாணவர்கள் இன்று பள்ளி உடமைகளை உடைத்து நாசமாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கெல்லாம் தமிழக பள்ளிக்கல்வித்துறை என்னதான் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. மாணவர்களை அடிக்க வேண்டாம் என ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் பள்ளி மாணவர்களால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை எப்படி கையாளப்போகிறது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை...


இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும் நிலையில், பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி பயில
அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பு அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும்,
சிசிடிவி வீடியோ, பதிவு, லைவ் போன்றவற்றை ஒரு கட்டு பாட்டு அறை உருவாக்கி கண்காணிக்க வேண்டும், அவற்றை தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் காவல்துறையினர் பார்க்கும் வகையில் இணைப்புகள் இருக்க வேண்டும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறு செய்யும் போது ஒரு பயம் உருவாகும் என சில அறிவுறுத்தல்களும் முன்வைக்கப்படுகின்றன...

அடுத்த செய்தி