ஆப்நகரம்

மாணவிகளிடம் சில்மிஷம்; சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர்- போக்சோவில் கைது!

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

Samayam Tamil 11 Oct 2019, 10:33 am
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த திருவோணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சாரங்கபாணி(30) என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ஆவார்.
Samayam Tamil Arrest


இன்னும் திருமணம் ஆகாத நிலையில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் தவறான நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன.

லலிதா ஜுவல்லரி: தப்பியோடிய சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்!

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, திருக்காட்டுப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தனது செல்வாக்கை பயன்படுத்தி, கல்வி அதிகாரிகள் உதவியுடன் மீண்டும் திருவோணம் அரசுப் பள்ளிக்கு பணிக்கு திரும்பினார்.

இதனையறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காலாவதியான பால் பாக்கெட் விற்றதால் அதிர்ச்சி- ஆவின் ஊழியருக்கு தண்டனை!

ஆனால் எதுவும் எடுபடவில்லை. இதன் பின்னர் காவல்நிலையம் முன்பு தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில், ஆசிரியர் சாரங்கபாணி மாணவிகளை தனியாக அழைத்து, செல்போனில் ஆபாச படத்தை காட்டி தொலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர்கள் 4 பேர் ஆந்திராவில் கைது

இந்நிலையில் பட்டுக்கோட்டை மகளிர் காவல்துறையினர் ஆசிரியரைக் கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு ஆசனாக விளங்க வேண்டியவர்கள், இப்படி கேவலமாக நடந்து கொள்வது மிக மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி