ஆப்நகரம்

ஒரத்தநாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 22 Jul 2019, 4:59 pm
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil suicide hang


ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் இந்துமதி 21. இவருக்கும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் சதீஷ்குமார் 28. இவர்கள் இருவரும் ஓராண்டுக்கு முன்பு முகநூல் மூலமாக காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் மாணவி இந்துமதி ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்துமதியும், அவரது கணவர் சதீஷ் குமாரும் கல்லூரி அருகே உள்ள எழுத்துக்காரர் தெரு பத்மா காலணிகள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

சதீஷ்குமார் ஒரத்தநாட்டில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்று விட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு சென்ற சதீஷ் குமார் வீட்டின் கதவை திறந்த போது மனைவி இந்துமதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டுள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இந்துமதியின் உடலை கைப்பற்றினர். தற்கொலை குறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சென்ற ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ், மற்றும் காவல் துறையினர் இந்துமதியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி ஓராண்டாகிய நிலையில் இளம் பெண் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கணவர் சதீஷ்குமாரிடமும் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி