ஆப்நகரம்

தாலி கட்டுவதற்கு முன்னாள் மாப்பிள்ளை எஸ்கேப்..! பெண் எஞ்சினியர் பரிதவிப்பு

கன்னியாகுமரி அருகே மாப்பிள்ளை தப்பி ஓடியதால் திருமணம் நிறுத்தப்பட்டது.

Samayam Tamil 27 Nov 2020, 10:11 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண் எஞ்சினியரை தவிக்கவிட்டு சென்ற மாப்பிள்ளையின் செயல் பெண் வீட்டாருக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் சுகுமாருக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சாஃப்ட்வேர் எஞ்சினியர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


அதன்படி கடந்த 26 ஆம் தேதி திருமணம் செய்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் பெண் அழைப்பு நிகழ்ச்சியை தடல்புடலாகா நடத்தியுள்ளனர். அப்போது, பெண்ணும், மாப்பிள்ளையும் அருகருகே அமர்ந்து விருந்து உபசரிப்பையும் முடித்துள்ளனர்.

இந்நிலையில், வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு மாப்பிள்ளை சுகுமார் மாயமாகியுளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பின்னர்தான் தெரிந்தது அவர் திரும்பி வரவே மாட்டார் என்று. அதாவது, திருமணத்துக்கு பயந்து மாப்பிள்ளை ஓடிவிட்டார் என தகவல் வரவே, பெண் வீட்டாரின் தலையில் கல்லை போட்டுள்ளனர்.

60 வயதான தாயை இரும்பு கம்பியால் அடித்து துடிதுடிக்க கொன்ற மகன்..! சென்னை பரபரப்பு

திருமணம் நடக்க இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், மணவறையை பற்றி பல வித ஆசைகளை கொண்டு மனக்கோட்டை கட்டியிருந்த பெண்ணுக்கு பேரிடியை தந்தது. இதனால் இரு வீட்டாருக்கும் இடையே சலசலப்புகள் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.

மாப்பிளையை குடித்து விசாரித்ததில், அவர் நீண்ட நாட்களாக வேறொரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதனால் சம்பவம் நடந்த அன்று ஓடியதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து, மகிழ்ச்சியாக நடைபெற்று வந்த திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு பெண் வீட்டார் கவலையுடன் வீடு திரும்பினர்.

அடுத்த செய்தி