ஆப்நகரம்

சிஷ்யைகள் இருவர் கைது: அடுத்து நித்யானந்தா தான்!

சாமியார் நித்யானந்தாவின் சிஷ்யைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Samayam Tamil 21 Nov 2019, 9:44 am
நித்யானந்தா மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் பதிவாகிவரும் நிலையில் கடத்தல், மிரட்டல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil நித்யானந்தா


பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் தனது 19 வயது, 15 வயது மகள்கள், 13 வயது மகன் ஆகியோரை நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். குறிப்பிட்ட நாள்களுக்குப் பின் அவர்களை பார்க்கச் சென்ற போது அவரது பிள்ளைகள் அவருடன் வர மறுத்துள்ளனர். மேலும் ஆசிரமத்தைச் சேர்ந்தோர் அவரை அடித்து விரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ளீஸ், எங்க பெண் குழந்தைகளை விட்டிருங்க- நித்யானந்தா மீது பாய்ந்தது அடுத்த சர்ச்சை!

அதன்பின் தனது மூன்று பிள்ளைகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகர்பகுதியான ஹீராப்பூரில் உள்ள ஆசிரமத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிந்து அங்கு சென்றுள்ளார் ஜனார்த்தன ஷர்மா. அங்கும் அவரை அடித்து விரட்டியுள்ளனர்.

“நான் கடத்தப்படவில்லை... விரும்பியே இங்கு வந்துள்ளேன்” - நித்யானந்தா சிஷ்யை

இந்நிலையில் ஜனார்த்தன ஷர்மா குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் அளித்தார். அதனால் அவரது 15 வயது மகளும், 13 வயது மகனும் மீட்கப்பட்டனர். இந்நிலையில் நித்யானந்தா அவரது சிஷ்யைகள் பிரியா தத்வா, ப்ரான் பிரியா ஆகிய மூவர் மீது அகமதாபாத் விவேகானந்த நகர் காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

நித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை: சிஷ்யை வாக்குமூலம்!

தற்போது சிஷ்யைகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் நித்யானந்தா குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி.ஆச்சாரி நித்யானந்தா மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி