ஆப்நகரம்

வெளிநாட்டிற்கு எஸ்கேப் - நித்யானந்தாவை துரத்தும் சர்ச்சை; விரட்டும் போலீஸ்!

சாமியார் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 22 Nov 2019, 10:45 am
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவின் பீடம் செயல்பட்டு வருகிறது. இதனை அவரது இரண்டு சீடர்கள் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து இரண்டு குழந்தைகளை அழைத்து வந்து, அகமதாபாத் பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Samayam Tamil Nithyananda


இதுதொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அகமதாபாத் பீடத்திற்குள் அதிரடியாக நுழைந்து குழந்தைகளை மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது சீடர்கள் இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் அசரி, கர்நாடகாவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது குஜராத்தில் குழந்தைகள் கடத்தல் வழக்கும் பதிவாகியுள்ளது.

குளத்தில் மூழ்கி இரட்டையர் சகோதரிகள் உயிரிழப்பு : மணப்பாறை அருகே துயர சம்பவம்

இந்த சூழலில் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வப்போது ஆன்லைனில் மட்டும் சீடர்களிடமும், பொதுமக்களிடமும் உரையாற்றி வருகிறார்.

தேவைப்படும் பட்சத்தில் அவரை வெளிநாட்டில் இருந்து அழைத்து வந்து விசாரிப்போம். இந்தியாவிற்கு திரும்பி வந்தால் நித்யானந்தா நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.

காரை எடுத்துச் சென்று செம்மர கடத்தல்

அடுத்த செய்தி