ஆப்நகரம்

கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: சென்னையில் பரபரப்பு

சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 5 Nov 2019, 4:18 pm
சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்தவர் முகேஷ். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தனது நண்பரான விஜய் வீட்டுக்கு முகேஷ் இன்று சென்றுள்ளார்.

லஞ்சம் கேட்ட தாசில்தாரைக் கதற கதற எரித்துக் கொன்ற விவசாயி..!

விஜய் மற்றும் முகேஷ் ஆகியோர் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருந்துள்ளனர். விஜயின் சகோதரர் உதயா வீட்டின் வெளியே இருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உதயா வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்துள்ளார். அங்கு முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனிடையே, விஜய் வீட்டை விட்டு வெளியே ஒடி தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய நடிகை மீரா மிதுன்... அதிர்ச்சி தகவல்..!

நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முகேஷை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் உதயா அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரை பறிக்கும் 'மாஞ்சா' - திருவள்ளூர் அருகே போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள விஜய்யை தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி