ஆப்நகரம்

ஊராட்சி ஊழல்களை வெளிப்படுத்திய மாற்று திறனாளி மீது கொலை வெறி தாக்குதல்!

திருச்சி அருகே ஊராட்சி ஊழல்களை வெளிப்படுத்தியதாக மாற்று திறனாளி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Jan 2021, 6:24 pm
திருச்சி மாவட்டம் சூரம்பட்டி ஊராட்சியில் இலவச கழிப்பறை அமைக்காமல், நூறு நாள் வேலைக்கான போலி கணக்குகளை அரசிடம் காட்டி ஊழல் செய்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற மாற்றுத்திறனாளி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.
Samayam Tamil ramachandran


புகாரின் பேரில் மாவட்ட உதவி இயக்குனர் இன்று சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவர் கோடி, ஊராட்சி செயலாளர் கண்ணன் ஆகியோரிடம் நேரடி விசாரணை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், நேற்றிரவு கூலி படையை சேர்ந்தவர்கள் மாற்று திறனாளி ராமச்சந்திரனை அரிவாள், இரும்பு ராடை கொண்டு பலமாக தாக்கி கொலை செய்ய முயர்த்துள்ளனர்.

அதிலிருந்து தப்பிய ராமச்சந்திரன் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் அவரிடம் வாக்குமூலத்தை கேட்டு பெற்றனர். அதில், ஏற்கனவே மூன்று முறை ராமச்சந்திரன் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து ராமச்சந்திரன் கொடுத்த தகவலின் படி, சேறுகுடி ஊராட்சி தலைவரின் மகன் அசோக், குட்கா வியாபாரி மதிவாணன் ஆகியோருடன் சேர்ந்து சூரம்பட்டி ஊராட்சி தலைவர் கோடியும், ஊராட்சி செயலாளர் கண்ணனும் கூலி படையை ஏவி ராமச்சந்திரனை தாக்கியதும் அம்பலமானது.

நெற்பயிர் சேதம்: கடனை கட்ட முடியாமல் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை..!

கழிப்பறை கட்டியதாக போலி கணக்குகளை தயார் செய்து, அரசின் பணத்தை கொள்ளையடித்த ஊராட்சி நிர்வாகிகளுக்கு எதிராக தகவல் தெரிவித்த மாற்று திறனாளியை இரக்கமின்றி தாக்கியதால், ராமச்சந்திரனின் கால், கை எலும்புகள் முறிந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக ராமச்சந்திரன் உயிர் பிழைத்துள்ளளார். ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், கண்ணன், கோடி, பாலாஜி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாகவுள்ள சேறுகுடி ஊராட்சி தலைவரின் மகன் அசோக்கை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி