ஆப்நகரம்

பொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் அத்துமீறல்..! 5 வயது சிறுமிக்கு சித்ரவதை..

சாக்லேட் வாங்கி தருவதாக சொல்லி கூலி தொழிலாளியின் 5 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Oct 2019, 1:35 pm
பொள்ளாச்சி அடுத்த செம்மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோபாலபுரத்தை சேர்ந்த கார்த்தி, முருகன் ஆகிய கூலி தொழிலாளிகளிடம் நடப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் வேலைகளுக்கு மூவரும் ஒன்றாகவே சென்று வந்துள்ளனர்.
Samayam Tamil பொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் அத்துமீறல்


வேலை முடிந்து வரும்போது மூவரும் மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் அடிக்கடி கார்த்தி மற்றும் முருகன் இருவரும் சரவணகுமார் வீட்டுக்கு சகஜமாக வந்து செல்வார்கள். இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை இரவு மூன்று பேரும் வழக்கம் போல மது அருந்திவிட்டு சரவணகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

சுபஸ்ரீ: ‘உங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்றுள்ளீர்கள்’ கண்டனம் தெரிவித்த நீதிபதி!

அங்கு வீட்டில் இருந்த குமாரின் 5 வயது குழந்தையை சாக்லேட் வாங்கித்தருவதாக கூறி கார்த்தி, முருகன் இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து குழந்தையை வீட்டில் கொண்டுவந்து இருவரும் விட்டுள்ளனர். குழந்தையின் உதடு போன்ற இடங்களில் ரத்தம் வழிந்ததை பார்த்த தந்தை சரவணகுமார், குழந்தையிடம் விசாரித்ததில் இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவம் அறிந்த ஊர்பொதுமக்கள் கார்த்தி மற்றும் முருகனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், கார்த்திக்கு அரிவாள் வெட்டும் விழுந்துள்ளது. அடிதாங்காமல் முருகன் தப்பி ஓடியுள்ளார். பொதுமக்கள் கூட்டமாக தாக்கியதில் கார்த்திக்கை யார் அரிவாளால் வெட்டினார்கள் என்பது தெரியவில்லை.

நடு இரவில் டாக்சியில் போனால் இப்படியெல்லாம் ஆகுமோ.? மன உளைச்சலில் இளம்பெண்..

இதனையடுத்து சிறுமி மற்றும் கார்த்தி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சரவணகுமார் அளித்துள்ள புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் கார்த்தி மற்றும் முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இயற்கை தேவதையின் எழில் கொஞ்சும் பொள்ளாச்சியில் தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறல்கள் நடந்து வருகிறது. ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் கல்லூரி பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த வந்த இளைஞர்களின் செயல் தமிழகத்தை உலுக்கியது. அதன்பிறகு பொள்ளாச்சியில் பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்யும் குற்ற செயல்கள் குறைந்த பாடில்லை. காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வந்தும் போக்சோ சட்டத்தில் ஏகப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

அடுத்த செய்தி