ஆப்நகரம்

உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு ஊரெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

பெரம்பலூர் அருகே உயிரோடு இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபர்களால் பரபரப்பு.

Samayam Tamil 10 Oct 2020, 5:05 pm
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் ரோஷ்னி. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் ரோஷ்னியின் கணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil kanneer anjali poster


இதனால் ரோஷ்னி கணவன் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி அன்று இயற்கை எய்தி விட்டதாக அவர் வசிக்கும் இடம் மற்றும் புறநகர் பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.


அதனை கண்ட ரோஷ்னியின் உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்து சம்பவத்தை தெரியப்படுத்தவே, ரோஷ்னி சார்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் போஸ்டர் ஒட்டிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், ரோஷ்னி குறித்த போஸ்டர்களை அவரது உறவினர்கள் கண்டறிந்து கிழித்து வருகின்றனர். ரோஷ்னி மீது விரோதம் கொண்டவர்கள் யாராவது இப்படி செய்திருப்பார்களா? அல்லது கணவன் தரப்பில் இப்படியான செயலில் ஈடுபட்டிருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷமாக மாறிய பால்..! 3 மாத குழந்தை பரிதாப பலி... விழுப்புரத்தில் சோகம்

என்னதான் விரோதமாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பழி வாங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி