ஆப்நகரம்

தஞ்சை பள்ளி மாணவியை வீடியோ எடுத்தவர் ஆஜராக உத்தரவு: பரபரப்பை எட்டும் வழக்கு

தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் கேம்ப் அலுவலகத்தில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Samayam Tamil 25 Jan 2022, 3:27 pm
தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை, செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil thanjavur school girl suicide case
thanjavur school girl suicide case


மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இன்று இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில்," நேற்று மாணவியின் பெற்றோர் நேரில் ஆஜராகி நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் வழங்கினர்" என தெரிவிக்கப்பட்டது.

சீலிட்ட கவரில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தை நீதிபதி படித்தார். பின்னர், "அந்த வீடியோவின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

அரசுத்தரப்பில்," பள்ளி ஊழியர்கள், மாணவர்கள், செவிலியர் உட்பட 37 சாட்சிகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 14 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. யூடியூபிலேயே அந்த வீடியோ உள்ளது. வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய பதிவு செய்யப்பட்ட செல்போன் தேவை" என தெரிவிக்கப்பட்டது.

என்கவுண்டருக்கு பயந்து தலைமறைவான பிரபல ரவுடி படப்பை குணா சரண்..!

தொடர்ந்து, விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் வழங்க வேண்டும்" எனவும் அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

தொடர்ந்து நீதிபதி, பெற்றோரின் வாக்குமூலத்தில், மாணவி பேசிய வீடியோ பதிவின் சிடி காவல்துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுத்தரப்பில்," பதிவு செய்யப்பட்ட செல்போன் தேவை. அதன் மூலமாகவே உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியும்." என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "சிடியில் பதிவு செய்யப்பட்ட வீடியோவைக் கொண்டு, அது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்யலாமே? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மாணவியின் தந்தையிடம் யார் வீடியோவை எடுத்தது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு முத்துவேல் என்பவரே வீடியோ எடுத்தார் என பதிலளிக்கப்பட்டது.

அவர் எங்கிருக்கிறார்? என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, தெரியவில்லை என முருகானந்தம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் இருந்தால் மட்டுமே வழக்கை விரைவாக விசாரிக்க இயலும் என தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதி, செல்போனில் மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் அந்த செல்போனுடன் வழக்கை விசாரிக்கும், துணை காவல் கண்காணிப்பாளர் முன்பாக நாளை ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து நீதிபதி," மாணவியின் பெற்றோரது வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி பிருந்தாவிடம் வழங்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது. வீடியோவில் உள்ளது மாணவியின் குரல் தானா? என்பதை உறு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் தேவை. ஆகவே, அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் கேம்ப் அலுவலகத்தில் ஆஜராகி, அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை சமர்பிக்க வேண்டும். மாணவியின் பெற்றோரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

விசாரணை அதிகாரி மைலாப்பூரில் உள்ள தடயஅறிவியல் அலுவலகத்திற்கு செல்போன், வீடியோ பதிவு உள்ள சிடி ஆகியவற்றை வழங்கி, அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து, வியாழக்கிழமை மாலைக்குள்ளாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி